நாய்சேகர்ரிட்டர்ன்ஸ்+வரலாறு முக்கியம்=பாவம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வரலாறு முக்கியம்——–
இந்த இரண்டு படங்களையும் ஏன் ஒன்றாக திரைவிமர்சனம் நிகழ்ச்சியில் பார்க்கறம்னா இரண்டு படங்களும் படம் பார்க்க வந்த ரசிகனின் ரசனையை கீழ்தரமாக நினைத்து உருவாக்கப்பட்டது ,
காமடி வசனம் என்ற பெய‌ரில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் மேல்வார்த்தை வன்முறை நடத்தியிருக்கு
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்:- நாய்களை திருடி விற்கும் வடிவேலு தாதா ஆனந்த்ராஜ் நாயை அவர் காரோடு திருடும் போது தெரியாமல் காரில் இருந்த 10 கோடியும் சென்று விடுகிறது,
ஜெயிலில் இருந்து வெளிவந்த ஆனந்த ராஜ் வடிவேல் குழுவை தேட வடிவேலு வேறொரு காஸ்ட்லி நாயை தேடி ஐதரபாத் செல்கிறார்,இவரை தேடி ஆனந்த ராஜ்ம் வருகிறார்அதிஷ்ட நாய் இருக்கும் வில்லனிடம் வடிவேலும் ஆனந்த ராஜ்ம் மாட்டிக் கொள்ள அதிஷ்ட நாய் ,,,படம் பார்ப்பவர்கள் கதி என்ன? என்பது தான் மீதி படமே, வடிவேலு தான் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் தன்னை பார்த்தால், தன் கெட்டப்பை பார்த்தால் மக்கள் சிரிப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றி இனி காமெடி கேரக்டரில் நடிக்காமல் இருக்க வேண்டும்,2 மொக்க ஜோக்க தாங்கமுடியாது இரண்டரை மணிநேர மொக்கய எப்படி தாங்கறது
அடுத்ததாக வரலாறு முக்கியம்:-
ஹீரோ ஜீவா வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்கு கேரளா ஹீரோயின் குடிவற்றாங்க ,காண்டம் பாக்கட்டோட ஹீரோயின் வீட்டிற்கு நைட்டு 12 மணிக்கு ஜீவா போக டென்ஷனான ஹீரோயின் தன்னிடம் தப்பான நோக்கத்தோடு ஜீவா வந்திட்டாறுனு சொல்லி லவ் பிரேக் அப் செய்யறாங்க
ஆக மீண்டும் இவங்க லவ் எப்படி சேருதுங்கறது தான் மீதி படமே,தினசரி வயகரா மாத்திரை போட்டுகிட்டு வித விதமா பொம்பளைங்களோட தொடர்பு வைத்து கேவலமா மாட்டும் VTVகணேஷ், இவர் தான் ஜீவா வுக்கு லவ் அட்வைஸ் கொடுக்கும் மாமா ஜீவா அம்மா சரண்யா ஹீரோயின் அப்பா இவங்க இரண்டு பேரை தவிர இந்த படத்துல நடிச்ச எல்லோரும் அவங்க வயசுக்கு தகுந்த மாதிரி செக்ஸ் தேடி அலையற மாதிரியான காட்சி வைச்சிருக்கறாரு இயக்குனர் சந்தோஷ்ராஜன். இரண்டு படமும் சிரிக்க எடுக்க பட்டாலும் உடலின் எந்த பார்ட்டும் சிரிக்கலை, ரசிக்கலை

About Author